Friday, July 6, 2018

அழுகையின் உயிர்

சிறு குழந்தையின் வாழ்க்கை பிறப்பு, அழுகையுடன் தொடங்குகிறது.

புவியில் பிறந்த குழந்தையின் தலை முடி முதல் முறையாய் புவி மேலே விழும் போதும் அழுகை தானே.

பள்ளி கூடத்தில் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கும் போதும் அழுகை தான்.

முதல் முறையாக  பரிட்ச்சையில் தோல்வி பெரும் போதும் அழுகை தான்.

இளமை பருவத்தில் நண்பர்களுடன் சண்டையிட்டு மோதி வருவதும் அழுகை தான். மீண்டும் ஒன்று சேர்ந்தாலும் வருவது அழுகை தான்.

பெண் வயதிற்கு வந்தவுடன் தாயின் கண்களில் அழுகை தான் .

பள்ளியில் செய்த முதல் காதலும் இங்கே பலருக்கு அழுகையில் முற்று பெறுகிறது.

படித்து முடித்தவுடன் நண்பர்களை பிரிந்து செல்லும் போதும் அழுகை தான்.

வேலை கிடைக்காமல் திண்டாடினாலும் அழுகை தான்.வேலை செய்வதற்கு ஊர் தாண்டி செல்லும் போது பெற்றோரை  பிரிந்து செல்லும் போதும் அழுகை தான்.

கல்யாண நாள் அன்று தாய் கண்களிலும் அழுகை தான் .

ஏழைக்கு உணவிற்காக அழுகை.பணக்காரனுக்கு பணத்திற்காகவே அழுகை.

கணவன் மனைவி இடையிலே சண்டை வந்தாலும் அழுகை தான் .

குழந்தை பிறக்கும் போது அழுகை தான்.

வயதான  தாயை செல்ல காணும் போதும் அழுகை தானே.

கடைசி காலத்தில் உயிருக்கு போராடும் போதும் சுற்றி இருப்பவர்களின் அழுகை.

இறந்த பின் மற்றவர்களின் அழுகை தான் வழி அனுப்பி வைக்கிறது.

மனிதன் தன் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அழுகையால் தெரிவிக்கிறான் .

வாழ்க்கையில் இத்தனை தருணம் அழுகையால் நிறைந்தாலும் பல தருணம் சிரிப்பதற்காகவே அமையும் .

சிரித்தும் அழுதும் மகிழ்ந்து வாழ வாழ்த்துக்கள்.





8 comments: